இந்த ஆண்டு பொள்ளாச்சியில் சம்பவம் போல, கடந்தாண்டு தமிழகத்தையே உலுக்கிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம். இந்த கல்லுரியில் பேராசிரியரான நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்வதாக புகார்கள் எழுந்தன.
அப்போது கல்லுரியில் படிக்கும் மாணவி நிர்மலா தேவியுடன் செல்போனில் உரையாடும் ஆடியோவை வெளியிட்டனர். இந்த சம்பவம் தமிழ் நாடு முழுவதும் தீயாய் பரவியது.
இந்த புகாரை அடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரை விசாரிக்கும் போது பெரிய தலைவர்கள் இருப்பதாக கூறப்பட்டன முக்கியமாக தமிழக கவர்னருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
இது ஒரு பொய்யான தகவல் என கவர்னர் மறுத்துவிட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலா தேவி ,இவர் பல முறை ஜாமீனுக்கு விண்ணப்பம் செய்து இருந்தார் ஆனால் நிராகரிக்கப்பட்டது. கடைசியில் இன்றைய தினம் இவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம் 11 மாதங்களுக்கு பின் வீடு திரும்பினார் இவர்.