சென்னை, பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை உணர்ந்து தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் விவகாரத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் பின்வாங்கி விட்டார் என்றும் , அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை எதும் செய்ய முடியாது எனவும் கூறினார்.