Mnadu News

சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ உருவாகிறது

பொதுவாக திரைஉலககில் வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அந்த வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ பாகங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ‘அரண்மனை’ படத்தின் மூன்றாவது பாகம் உருவாகவுள்ளது. தற்போது விஷால் மற்றும் தமன்னா நடிக்கும் படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி, இந்த படத்திற்கு பிறகு ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends