காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இத்தகைய புகழ்பெற்ற அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வந்த வண்ணம் உள்ளனர் .அந்த வகையில் காஞ்சிபுரத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவரது குடும்ப உறுப்பினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு மண்டபம் வரை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் காரில் வந்து இறங்கினார். வசந்த மண்டபம் அழைத்துச் செல்லப்பட்ட விஜயகாந்த் பிறகு குடும்பத்தினருடன், அத்திவரதரை தரிசனம் செய்தார்.தொடர்ந்து விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெற பூஜை நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 40 வருடங்கள் கழித்து நடக்கும் இந்த வைபவத்தை தரிசிப்பது மிகவும் உன்னதமானது என்றார்.