காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இதன் அடிப்படையில் பதினாறாம் நாளான இன்று, அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. ஏலக்காய், தாமரை பூ மற்றும் செண்பகப்பூ மாலை அணிந்து அருள்பாலித்து வரும், அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கடந்த 15 நாட்களில் 17 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More