திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று மாலை ஒரு துணை கண்காணிப்பாளர், 4 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள் என ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி லைசென்ஸ், ஆர்.சி. புக், ஹெக்மேட் என அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார், லாரி, சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். முடிவில் லைசென்ஸ், ஆர்.சி.புக், ஹெக்மேட் அணியாமல் செல்வது, ஆவணங்கள் இல்லாமல் பொருட்கள் எடுத்துச் செல்வது உள்ளிட்டவைகளுக்கு அதே இடத்தில் அபராதம் வசூலித்தனர்.
மணப்பாறை பகுதியில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய வாகன சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.