Mnadu News

மே தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த அரசியல் பிரபலங்கள்

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்களுக்கு உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது என்றும், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளில் தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான வெற்றிப் பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரை துச்சமென இழந்து பெற்ற, தீரமிகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரிமைகளை நினைவு கூரும் தினம் மே 1 என்று கூறியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களின் வாழ்வில் இன்பம் பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் இதயம் நிறைந்த மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகத் கூறியுள்ளார்.

Share this post with your friends