பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.