Mnadu News

பிரகாஷ்ராஜ் இனி தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது – கே.ராஜன்

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் பிரசாரம் செய்து வரும் பிரகாஷ் ராஜ் “தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கள் பறிக்கப்படுவது உண்மை தான்” என கூறியிருக்கிறார். இதனையடுத்து பலர் இவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பிரகாஷ் ராஜ் தமிழ் பட வாய்ப்பின் மூலம் பொருளும், புகழும் நன்றாக சம்பாதித்துள்ளார். வட மாநிலத்தவர்கள் இங்கு வேலை பார்ப்பதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.

இப்படி இருக்க பிரகாஷ் ராஜ் இப்படி நன்றி மறந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ் படங்களில் நடிக்கவிட மாட்டோம்” என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends