சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘கபாலி’, ‘காலா’ என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றிபெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வருகிறார். அம்பேத்கர் வழியை தீவிரமாக பின்பற்றி வருகிறார்.
அவர் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட ‘பரியேறும் பெருமாள்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி, இவர் பாலிவுட்டில் ஒரு படம் இயக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படம் ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகும் என சொல்லலாம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை கிரிக்கெட் வீரர் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடர்ந்த வனப்பகுதிகளில் காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.