காதலர் தினத்தன்று வெளியான ‘ஒரு அடார் லவ் ‘ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரியா வாரியர்மற்றும் நூரின் செரீப் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வந்த வண்ணமே இருக்கிறது .படம் வெளியாகுவதற்கு முன்பே மிகவும் வைரலானது என்றால் பிரியா வாரியர் கண்சிமிட்டலுக்கு, பிஜிஎம் தான் முக்கிய காரணமாக அமைந்தது .சில பேர் பிரியாவாரியர் தான் கதாநாயகியாகி என்றும் நினைத்தனர் .
ஆனால் படம் வெளியான பிறகு தான் தெரியவந்தது படத்தின் கதாநாயகி நூரின் செரீப் . நூரின் செரீப் இது பற்றி அவர் கூறுகையில் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறிவிட்ட படக்குழுவினர் பிரியாவாரியர் வைரலானதால் கதையே மாற்றி எடுக்கப்பட்டது .
அதனால் தன் கதாபாத்திரம் நிலைத்து நிற்கவில்லை என்று பிரியாவாரியர் குறை கூறினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரியாவாரியர் கதை எதிலும் திருத்தும் கொண்டு வரவில்லை .எப்படி சொன்னார்களோ அப்படி தான் கதை அமைந்தகத்து என இருவரும் மாறிமாறி மோதி கொள்கின்றனர் .
இதற்கடுத்து இந்த படத்தின் இயக்குனர் கூறுகையில் பிரியா வாரியர் பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கும் படி படத்தின் தயாரிப்பாளர் கூறியதாக அவர் குறிப்பிட்டார் . அதனாலேயே படம் தோல்வி அடைந்தது எனவும் அவர் கூறினார் .
இயக்குனர் கூறியதற்கு பதிலளித்த பிரியா வாரியர் நான் அமைதியாக இருப்பதால் என்னை யாரும் குறை கூற வேண்டாம் .நான் பேச தொடங்கினாள் பல பேர் சிக்கலில் மாட்டி கொள்வீர்கள் என அவர் கூறினார் .