உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து வென்றது தனக்கு வழங்கிய சிறந்த பிறந்தநாள் பரிசு என அவரது தாய் தெரிவித்துள்ளார்.உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார். தனது தாயின் பிறந்தநாளில் சிந்து இந்த சாதனையை புரிந்துள்ளார்.
சிந்துவின் வெற்றியை அவரது குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து பேசிய தேசிய அளவிலான முன்னாள் கைப்பந்து வீராங்கனையும், சிந்துவின் தாயுமான விஜயா, எல்லா பிறந்த நாளுக்கும் சிந்து தனக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பார் என்றும், இந்தமுறை நாட்டிற்கும் தனக்கும் சிறந்தபரிசை சிந்து கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.மேலும், இந்த போட்டிக்காக கடந்த 6 மாதமாக சிந்து கடுமையாக உழைத்ததாக கூறிய விஜயா, சிந்துவின் வெற்றிக்காக காத்திருந்ததாகவும் கூறினார்.