கொலையுதிர்காலம் படவிழாவில் கலந்து கொண்டு ராதா ரவி நயன்தாராவை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியதையடுத்து நடிகர் சங்கம் ,திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராதா ரவி கூறியதாவது, நயன்தாராவை பற்றி கூறியது தவறு என்று உணர்ந்து கொண்டதாகவும், மேலும் தான் மனதில் எதுவும் வைக்காமல் வெளிப்படையாக பேசினேன் என்றும் கூறியுள்ளார் .
தற்போது நான் பேசியது தவறு என உணர்ந்து நான் மன்னிப்பு கேட்க கூட தயாராக இருப்பதாகக் கூறினார் . இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி ராதாரவியை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.