காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய இருந்தார்.
பாட்னாவிற்கு செல்ல இன்று காலை டெல்லியில் விமானத்தில் செல்வதாக இருந்தார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது. இதற்கு டிவிட்டரில் தொண்டர்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.