காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இதன் அடிப்படையில் பதினாறாம் நாளான இன்று, அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார் . கடந்த 15 நாட்களில் 17 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.மேலும் புகழ்பெற்ற அத்திவரதர் சிறப்பு தரிசனத்திற்காக குடியரசு தலைவர் முதல் பல்வேறு முக்கிய தலைவர்களும் ,பிரபலங்களும் கலந்து கொண்டனர் .இந்நிலையில் ,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை கலைஞரின் மனைவியும் ,கனிமொழி அவர்களின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் தரிசித்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More