முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் விலை உயர்வு இருபுறமும் கூரான கத்தி என்றார். தமிழக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானியம் அளிக்க வலியுறுத்தினார்.