Mnadu News

அத்திவரதர் சயன கோலத்திலிருந்து நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 1 முதல் காட்சி -முதல்வர் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் 17ஆம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசித்த பின் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் .

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வழக்கம் கடந்த ஒன்றாம் தேதி துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் தரிசித்து இந்த நிலையில் இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருக்கோயிலுக்கு வந்த அவருக்கு அறநிலையத்துறை சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கபட்ட பின் சிறப்பு அர்ச்சனைக்கு பின் சாமி தரிசனம் செய்தார்.அதன்பின் வைபவம் சார்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.பின்பு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் கூடுதல் வசதிகள் செய்ய அறிவுறுத்தினர்.

Share this post with your friends