Mnadu News

காதலன் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட  பள்ளி மாணவி…

சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகர் ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் சிவலிங்கம் மரக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் இரண்டாவது மகன் இளங்கோ வயது 18 இவருக்கும்  அதே பகுதியில் வசித்து வரும் அண்ணாதுரை வீடு கட்டும் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகள்கள் மூத்த மகளான அர்ச்சனா வயது 16 பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் . இவரை இளங்கோ பல மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அர்ச்சனாவின் வீட்டிற்கு தெரியவந்தவுடன் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரவும் மனமுடைந்த இளங்கோ கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் .

அதை பார்த்த அர்ச்சனா மிகவும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இரண்டு வாரமாக அவரைப் பார்த்த பெற்றோர் அருகாமையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர் .அங்கேயும் மன வருத்தத்துடன் இருந்த வந்த அர்ச்சனா வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆர்கே நகர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே மாதத்துக்குள் அடுத்தடுத்து இளம் காதல் ஜோடிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends