மத்தியப்பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் ராம்நகர் ஊராட்சி தலைவரும், பாஜக பிரமுகருமான சுஷில் பட்டேல் தனது ஆதரவாளர்களுடன் வந்து அரசு அலுவலர் தேவ்ரத்ன சோனியை தாக்கினார்.
அரசு அலுவலர் தேவ்ரத்ன தாக்கப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரி ஒருவர் பாஜக எம்எல்ஏவால் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.