தமிழகத்தில் சேத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 5 வயது சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பக்கிரிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பக்கிரிசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்தனர் . இந்த வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், பக்கிரிசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.