சமீபத்தில் ரெட்டி டைரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்சியர் சுப்ரமணிக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டிருந்தது ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை அதிகமாகிவிட்டது அதற்கு காரணம் ஸ்ரீ ரெட்டி தான் என்று சுப்பிரமணி சொல்லிக்கொண்டிருந்தார் .
இதன் காரணமாக ஸ்ரீ ரெட்டியின் வீட்டுக்கும் சென்று ரகளை செய்துள்ளார் . இந்த சம்பவத்தால் பயந்து போன ஸ்ரீ ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இந்த புகார் ஸ்ரீ ரெட்டி அனைவரையும் பரபரப்பாக்க செய்த நாடகம் என்று அனைவரும் கூறிவந்த நிலையில் .
தற்போது சுப்பிரமணி என் வீட்டிற்க்கு இரவு 11 : 30 மணிக்கு வந்தது உண்மை என்றும் அதற்கான சி சி டிவி காட்சிகள் என்னிடம் இருக்கிறது என்றும் பதிவை வெளியிட்டுள்ளார் மேலும் அதை நான் உயர் காவல் அதிகாரிகளிடம் கொடுக்க போவதாகவும் சொல்லிருக்கின்றார்.