ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர். இந்நிலையில் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா உட்பட பல திரை பிரபலங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்து வாக்களிக்க அனுமதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சிவகார்த்திகேயன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் வாக்களித்ததால் அவரது ஓட்டு கள்ள ஓட்டாக கணக்கிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரித் தெரிவித்துள்ளார்.