ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் அமைந்துள்ள ஓப்ரா ஹவுஸ் மற்றும் துறைமுக பாலம் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பனிசூழ்ந்துள்ளது . துறைமுக பாலம் இருப்பது தெரியாத அளவுக்கு பனிசூழ்ந்து உள்ள நிலையில், அதன் அருகிலுள்ள சிட்னி விமான நிலையத்திலும் ஓடுதளமும் கண்ணுக்கு தெரியாதவாறு பனி புகை படிந்துள்ளது உள்ளது.
இன்று மட்டும் 10க்கு மேற்பட்ட உள்ளூர் விமானங்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில சர்வதேச விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .