நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். விஷால் மீது பல்வேறு மோசடி புகார்களை சில தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளரான சேகரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனி அதிகாரி சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.