Mnadu News

தண்ணீர் பஞ்சமில்லை என உண்மைக்கு மாறான தகவலை உள்ளாட்சி துறை அமைச்சர் சொல்கிறார் – ஸ்டாலின்

தற்பொழுது தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ,திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் முழக்கமிட்டு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் எடுத்துள்ளனர்.தமிழக அரசை நோக்கி ஸ்டாலின் அவர்கள் குடம் இங்கே தண்ணீர் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார் .தமிழகத்தில் வேலைவாய்ப்பு ,குடிநீர் ,வேலை வாய்ப்பு ,நிதி போன்றவை தமிழகத்தில் மோசமான நிலை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .

மேலும் அவர் கூறுகையில்,அமைச்சர் வேலுமணி அவர்கள் ஊழல்மணி மற்றும் அவர் உள்ளாட்சி துறையில் பணியாற்றவில்லை ,ஊழல் துறையில் தான் பணியாற்றுகிறார் என விமர்சித்து கூறினார்.

ஸ்டாலின் இதுகுறித்து மேலும் கூறுகையில் நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது என்னை யாரும் ‘உள்ளாட்சி துறை’ அமைச்சர்கள் என அழைக்கமாட்டார்கள் .நல்லாட்சி துறை அமைச்சர் என்று தான் அழைப்பார்கள் என கூறினார் .

தண்ணீர் பஞ்சம் இல்லை என உண்மைக்கு மாறான தகவலை சொல்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கூறுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தண்ணீர் பஞ்சம் இல்லை என கூறிவிட்டு பள்ளிகளை மூட கூடாது ,என அமைச்சர் கூறுகிறார் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More