Mnadu News

வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்த வரும் பண்டிகைகளுக்கு வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் காரணமாக வெல்லம் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. தேவை அதிமாக இருப்பதால் வெல்லத்திற்கு உரிய விலை கிடைப்பதாக கரும்பு விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் விற்பனையாகிறது என்றும் இந்த விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Share this post with your friends