முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் அதன் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.ஆனால் மனுதாரர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம், அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
அந்த கோரிக்கைகளை ஏற்று 12 மாநிலங்களில் இருந்து ஏற்கனவே தொடுக்கப்பட்ட 100 முக்கிய வழக்குகள் கடந்த 3 ஆம் தேதி அன்று அந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.இந்நிலையில் , தமிழ்மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அதில், சரவண பவன் ராஜகோபாலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.