Mnadu News

சுரேஷ் ரெய்னாவை அன்பில் நெகிழவைத்த சென்னை ரசிகர்கள் மனம் உருகி ட்விட் செய்த ரெய்னா.!

2019 ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி வரும் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது இதற்கான சென்னை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். அப்போது தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திற்குள் வந்தனர் மக்கள் ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்து சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாழ்வில் சில கணங்கள் இதயத்துக்கு மிக அருகே இருக்கும். நன்றி மட்டுமே என்னிடம் உள்ளது” என சென்னை ரசிகர்கள் அளித்த வரவேற்பு பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ரெய்னா.

Share this post with your friends