சட்டசபையில், திமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் பேசுகையில், திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதன் அடிப்படையில் தான், தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்து பேசியதாகவும் அதையும் உறுப்பினர் இங்கு குறிப்பிடவேண்டும் என்றார்.அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, தமிழகத்தில் இருந்து கட்சி பாகுபாடின்றி முதலமைச்சர் உட்பட அனைவரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாகவும், இது தமிழகத்திற்கான வெற்றி எனவும் தெரிவித்தார்.தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக எம்.பிக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More