Mnadu News

தமிழக அரசு வேலை தமிழருக்கே – திருச்சியில் போராட்டம். 400 பேர் கைது

திருச்சியில் இரயில்வே பணிமனையின் முன்பு தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் தமிழக அரசு வேலை தமிழருக்கே என்ற கோரிக்கை முன்வைத்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போராட்டத்தை தடுத்து 400க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர்.

மத்திய மாநில அரசு வேலைகளில் தமிழருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் 90 முதல் 100 சதவீதம்  அரசு வேலைகளில் அயல் மாநிலத்தவருக்கே தாரை வார்க்கப்பட்டு வருவதாக பெ. மணியரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு முனையத்தில் பதிவு செய்துவிட்டு பெரும்பான்மையானோர் வேலையின்றி தவித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழருக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends