Mnadu News

தமிழகத்தில் புயல் பாதித்த அன்றைய முதல் நாளிலிருந்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு – தமிழிசை

தமிழகத்தில் புயல் பாதித்த அன்றைய தினம் முதலே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார் .சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தராஜன் , தமிழகத்தில் புயல் வந்த போது கூட பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது முன்னதாகவே நிதி ஒதுக்கியிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாடியிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக அவர் பதில் அளித்தார்.

Share this post with your friends