Mnadu News

தாம்பரத்தில் அதிமுக, திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை தாம்பரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர் தங்களை அழைக்காமல் எப்படி ஜமாபந்தி நடத்தலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த போது இரண்டு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த கலவரத்தின் போது அருகிலிருந்த நாற்காலிகள தூக்கி வீசியதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.இதை தொடர்ந்து அதிகாரிகள் ஜமாபந்தி நடத்தாமல் அறைக்கு சென்றனர். பதற்றத்தை தணிக்கும் வகையில் தாம்பரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More