Mnadu News

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…

திருநெல்வெலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து சாகுபடிக்கு வரும் 30ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 781 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More