நடிகர் விமல், நடிகை ஓவியா இணைந்து நடித்த ‘களவாணி 2’ படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், களவாணி 2 படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி படத்தை திரையுடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை திரையிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.