Mnadu News

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

தமிழகத்தில் மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தலை ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஆணையம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவுபெற்ற நிலையில் மனுக்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 39 மக்களவைத் தொகுதிகளுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களில் 1400 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கால அவகாசம் உள்ளதால் இறுதிப் பட்டியலை அதன்பின் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Share this post with your friends