Mnadu News

தேர்தல் பற்றி 6 மணிக்கு மேல் பேட்டிக் கொடுக்கத் தடை -தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் ஏழு கட்ட தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தலாக தமிழ்நாட்டில் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனையடுத்து கட்சி தலைவர்கள் ,நட்சத்திர பேச்சாளர்கள் தீவீரமாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில் தேர்தல் அதிகாரி சாத்தியபிரேதா சாஹு கூறுகையில் கட்சி தலைவர்கள்,நட்சத்திர பேச்சாளர்கள் இன்று மாலை 6 மணியோடு நிறுத்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார். மேலும் மீடியாவிடம் எந்த ஒரு விளம்பரமோ அரசியல் சார்ந்த பேட்டியோ அளிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார் .

Share this post with your friends