Mnadu News

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா நடைபெற்றது.காரைக்காலம்மையார் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு  முன்  தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான , பரமசிவன் அடியார் கோலத்தில் வீதிதோறும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தபோது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மாங்கனிகளை வீதி முழுவதும் இறைத்து சிவனை வழிபட்டனர்.இந்த புனித திருவிழா வைபவத்தையொட்டி , மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவைக் காண ஏராளமானோர் வந்துள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More