Mnadu News

காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா நடைபெற்றது.காரைக்காலம்மையார் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் இத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு  முன்  தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான , பரமசிவன் அடியார் கோலத்தில் வீதிதோறும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தபோது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மாங்கனிகளை வீதி முழுவதும் இறைத்து சிவனை வழிபட்டனர்.இந்த புனித திருவிழா வைபவத்தையொட்டி , மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவைக் காண ஏராளமானோர் வந்துள்ளனர்.

Share this post with your friends