Mnadu News

அமலுக்கு வருகிறது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் விண்ணப்பிக்கும் புதிய முறை …

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மாணவர்களின் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends