சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த நான்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பாமகவினர் ஆதரிக்குமாறு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நடைபெற்று முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும், 38 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவினரோடு பாமகவினர் ஒற்றுமையோடு பணியாற்றினர். அதுபோல் இந்த 4 இடைத்தேர்தல்களிலும் பாமகவினர் அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையோடு பணியாற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.