கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலுக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்த ஐந்தடி உயரம் கொண்ட உண்டியல் திருடப்பட்டது.
அந்த உண்டியலில் பல ஆயிரம் ரூபாய் காணிக்கை தொகை இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் உண்டியலை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி உள்ள நிலையில் அதனை கொண்டு தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.