Mnadu News

தொண்டர்களிடம் கையேந்தும் திருமாவளவன்

கடந்த சில ஆண்டுகளாக விசிகவில் இருந்து சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ விடுதலை சிறுத்தைகள் கட்சி போகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலையே கடுமையான நிதி நெருக்கடியிலேயே சந்தித்தது.

விழுப்புரத்தில் போட்டியிடும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் அவரை திமுகவின் வேட்பாளராக கருதி தேர்தல் செலவுகளை திமுகவே பார்த்துக் கொள்கிறது.

ஆனால் திருமாவளவன் சிதம்பரத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதால் திமுகவினர் தேர்தல் செலவுகளை செய்வதற்கு திருமாவளவனுக்கு சுணக்கம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே கேட்ட மோதிரம் சின்னம் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் திருமாவளவனுக்கு மேலுமொரு இடியாக இது நிச்சயம் இருந்திருக்கக் கூடும்.

எனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன் தொண்டர்களுக்கு தேர்தல் செலவீனங்களுக்கு நிதி அளிக்குமாறு தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends