தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நிருபர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதுசென்னையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்தடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .