Mnadu News

தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை

தற்போது தமிழகத்தில் கோடைகாலம் என்பதால் நகரெங்கும் அனல் காற்று வீசிவருகிறது .சில மாவட்டங்களில் இயல்பு  வெப்பநிலையை காட்டிலும்  அதிகமான  வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழையும், 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவித்துள்ளது .

Share this post with your friends