Mnadu News

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற சிறப்பு முகாம்

ரிசர்வ் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி தரும் சிறப்பு முகாமை சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது. ரிசர்வ் வங்கியின் தென்மண்டல பொதுமேலாளர் எல்.வி.எஸ்.மோகன் முகாமை தொடங்கி வைத்தார். நோட்டின் சேதத்திற்கு ஏற்ப புதிய நோட்டானது வழங்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களிடம் உள்ள கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends