சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் தற்பொழுது வாபஸ் வாங்கியுள்ளனர்.ஊதியம் வழங்கப்படும் என்கிற உறுதிமொழியை ஏற்று வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளனர்.இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.