மக்களவைத் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் நேற்று மாலையே பெரும்பாலானோர் வேட்புமனுத் தாக்கல் செய்து முடித்துவிட்டனர்.ஆளும் கட்சியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்கின்ற சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.
ஆனால் திமுக கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்கப்பட்ட மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக பானை சின்னம் வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கப்படாததையம் கண்டித்து டிவுட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது ஜனநாயகப் படுகொலை எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் எதிர் எதிர் அணியாக களம் கண்டாலும் அரசியல் நாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார் திமுக தலைவர் முக. ஸ்டாலின்.
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
— M.K.Stalin (@mkstalin) March 25, 2019