இந்தியாவில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் அதிகாரியை பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் வாக்குச் சாவடிப் பகுதியில் சிறுது நேரம் பதட்டம் காணப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரி கூறியதால் பா.ஜ.க தொண்டர்கள் அவரைத் தாக்கினர். விரைந்து வந்த போலீசார் வாக்குச்சாவடி அதிகாரியை பதட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.