Mnadu News

வைகோ ஸ்டாலின் சந்திப்பு

ஸ்டாலினை  நேரில் சந்தித்த வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலின் போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தாக வைகோ கூறினார்.

மேலும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு என்றும்,  4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஈடுபாடோடு தேர்தல் பணியில் இதே கூட்டணிக் கட்சிகளோடு ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.

மேலும் பொன்னமராவதி கலவரம் குறித்து கருத்து தெரிவித்த வைகோ பொன்னமராவதி  பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; அதற்கு காரணமான இருவரை கைது செய்து பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும்  எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this post with your friends