விஜய் நடித்த ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ஜே.கே இயக்கத்தில் ‘ராஜ பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அடுத்த ஜென்மத்தில் காவல்துறையில் வேலை பார்க்க விரும்புகிறேன். என் வேலையை நான் நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குனர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.